Sunday, October 17, 2010

அவளும் அவனும்

ஒரு இந்திய சிற்றூர் சூழலில், சிறுபிள்ளை காதலால், ஊரார் ஏசலுக்கு அஞ்சி பிரிந்த காதலர் இருவர் நண்பன் இல்லத்தில், நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரை ஒருவர் காண நிகழ்ந்தது...


"
பேசலாமா?
பேசினால் ஏசுவாரோ? 
இவருள் இப்பொழுதும் காதல் உண்டு என்பாரோ? 
உருகிவிடுவேனோ, பேசினால்?
இயல்பாய் இருத்தலும் ஆகுமோ என்னால்?" எண்ணினான் அவன்.
அவளைப் பார்த்தான். 
அவள் கண்களைக் கண்டான் . 
காண முடியாது
உடனே வேறெங்கோ நோக்கினான்.
"அவள் மனதைக் கொன்றது நான் அன்றோ", எண்ணினான்
"காணேன். அவள் கண் கண்டால் என் கண்ணில் கண்ணீர் திண்ணம்".
அவள் 'திருவடியைப்' பார்க்கிறான்.
அவள் மிகுந்த தயக்கத்துடன்
யாருக்கும் கேட்கா ஓசையில் கேட்டாள்,
"சுகமா?"
அவள் வாய் திறக்கவில்லை.
கண்ணும் அசையவில்லை.
அனால் அவள் சொன்னது இவனுக்கு மட்டும் கேட்டது.


காலை மட்டும் நோக்கியவாறு
தலையை அசைத்தான்
"சுகம்" என்று சொன்னாற்போல.


இருவர் கண்களும் எதையும் காணவில்லை.
கண்களை மூடியது,
இமைகள் அல்ல,
தேம்பி நிற்கும் கண்ணீர்.


யாரோ கத்தினார்..
"கேக் வெட்டலாம். டைம் ஆயிருச்சு" என்று.
ஒன்றும் நடக்காதது போல் நகர்ந்தான்
இவன் விழாவில்
சிரித்தான்.
குதூகலித்தான்
பாவம், அவளைத் தவிர
வேறு யாரும் உணரவில்லை,
அவன் சிரிப்பும் புன்னகையும் போலி என்று.


பிறந்தநாள் விழா முடிந்தது
ஆனால் இவர் மனதில் பூகம்பம்?
முடியவில்லை...


என்று முடியும் அது?
விடை அறிந்தவன் ஒருவனே...
அவன் தான்
காலம்...

Saturday, September 4, 2010

குழந்தைத் தொழில்

குழந்தைத் தொழிலை எதிர்த்து
உண்ணாவிரதப் போராட்டம்.
போராட்டம் முடிந்தது
அருகே கடையில் பணி புரியும்,
பத்து வயது சிறுவன் கொண்டுவந்த குளிர்பானம் குடித்து

Child Labour

A day long fast against child labour,
The fast ended with the juice given to the leader,
By a child worker in the nearby restaurant.

Tuesday, August 17, 2010

Be Happy

தமிழ் தெரிஞ்சவங்களுக்கு : இது யூத் படத்தில் வந்த "சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்" என்ற பாட்டின் மொழிபெயர்ப்பு தான். தமிழில் யாம் கண்ட இன்பம் பிறரும் காண யான் விழைந்து செய்வது இது.

I am not good, in fact bad when I write in English, unlike Tamil. This is my first attempt in fact. Please bear with me and my faults :) Suggestions are always welcome...

Be Happy, Be Happy,
For it is the strength of life,
Happiness if lost, what is
You become nobody.
Once a storm sets,
Earth gets cool rain;
There lies a boon,
In each of your pain.
Failure is as sweet as victory,
Bitter neem contains, nectar within,
Fault finders find fault,
But my dear,don't worry,
Paint the darkness with your pleasing smile.
Mistakes over mistakes,
When rectified lead to culture;
Mistakes aren't crime,
Nor are failure defeats;
Your heart isn't a bin for sorrows
Make it a happy flower pot.
The pearl of happiness lies within the shell of sorrow
Learn the art of making diamonds out of tears
Thank the thorn, because of which you got a shoe to wear!!!

Sunday, August 15, 2010

என் திருநாடு 2

காட்சி - 1

இடம் :
வள்ளுவனின் பள்ளி
பங்குபெறுவோர் : வள்ளுவன், கபிலன், பரணன்

அறிவுயர் அறமுயர் வள்ளுவனோடு சிறு நல வயதிருந் திருப்பவன் கபிலன்
பரணனும் இவரோடாண்டும் அரண் எனும் நட்பாய்த் திரிந்தான்
மூவர் படிப்பது பள்ளியில் உயர்நிலை தேவர் அடியைப் போற்றி
உழைப்பும் கடுமை இவரது பிழையில் முயற்சியும் செய்தனர்

வள்ளுவன் :
முயன்றோம் மூவர் ஒன்றாய்
ஆண்டுகள் இரண்டும் ஆயின தொடங்கி
ஈண்டொரு மாதமு முளதே
தவத்திருத் தேர்வினை எழுத

கபிலன் :
முயன்றோம் முடிப்போம் அச்சம் அறுப்போம்
நுழைவோம் அரியதாம் கடியதாம் இனியதாம்
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துள் நாமே
முந்துவோம் முனைவோம் வெற்றி அடைவோம்

பரணன் :
இன்னும் சில நாள் அன்றி
இனிதே கழிந்த வாழ்வும் இருமா?
பள்ளியின் வாழ்வுபோல் ஒன்றும் உண்டோ?
நாமும் ஒன்றாய் இருக்கவும் மாட்டிலை

வள்ளுவன் :
வா இப்பொழுது சென்று படிப்போம்
உயர் நல மதிப்பெண் மீட்டுவம் அதனால்

பரணன்:
படிக்கிறேன் எனினும் நித்தம் இரு மணி நேரம்
வரையில் போனது யான் என் இனியாள் ஓடு
பேசுதல் தனிலே, தொலைக்கேன் அவளை
எது பொருட்டும் நான்
அவளோ எனக்காய், யான் அவளுக்காய்

வள்ளுவன் :
மொழிந்துளேன் பன்முறை
காதல் தனக்குப்
பருவம் இதன்று
கேளாய் எம் சொல்
சொல்லிப் பயனென்
சொல்லற்க பயனிலாச் சொல்

கபிலன் :
கேளார்க்கு இசை எதற்குக் - கண்காணார்க்குக் கலை எதற்கு?
மதியானுக்கோர் அறிவுரை எதற்கு?
அறிந்தும் அறிவிலானுக்குச் சிறப்பெதற்கு?
இது இனி பேச நோவது நாமே
பயனிலை,
செய்வது சொல்வோம், முடிப்போம்
வெற்றியும் உண்டு, நம் தேர்வில்,
செல்வோம் வா

பரணன் :
அங்ஙனம் இல்லை தோழரே!
புரிந்தும் கொள்மின்

கபிலன், வள்ளுவன் : (மௌனம்)

என் திருநாடு 1

வாழ்த்து :

யானை போலும் மாபெருங் கேட்டை
யானை போலும் துதிக்கை கொண்டீ
யானை அறமது கொற்போற் கொல்லும்
யானை முகவன் காற்குத் துதிக்கை (௧)

மலர்மேல் வாச மமையா தமையா
மலர்மேல் வாசஞ் செய்யு மிவளை
மலர்மே லிட்டே வழிபட யாண்டும்
மலர்மேல் வாழ்வொன் றமையா தமையா (௨)

சிகரம் கொணர்ந்தா னிலங்கையா மந்த
நகர மெரித்தா னனுமான் - மிகவே
யுளமெலாம் முற்றும் நிறைந்தான் அவன்னல்
களங்கமில் பாதம் துணை (௩)

முன்னுரை :
ஒப்பிலா வளங்களோடும் தப்பிலா நெறிகளோடும்
விளங்குமிப் பாரதத்தைக் களங்கமில் சீற்றமொடும்
துன்பமில் இன்பமொடும் அன்பதோடிணக்கமொடும்
நெறியுளோர் மிகுந்திருக்க அறிவுளோர் சார்ந்திருக்க
நாட்டினைச் செழிப்பாக்கக் காட்டினை இயல்பாக்க
எங்குமே இருந்திடாதப் பொங்குமா வளங்கள் கொண்டுச்
சிங்கமாய்ச் சீறி நிற்கும் தங்கமாம் நாட்டுக்காக
இன்னுயிர் இழந்தும்கூட பொன்னுயர் நாட்டைக் காத்தப்
பேருயர் வீரர் போல ஆருயிர் ஈண்டிங்கார்க்கும்
பாரத மக்கள் தம்மை நாரதர் போல யானும்
மாற்றிட எடுத்த வேள்வி ஆற்றிட வேண்டிய வேள்வி
இதுதான் என்றன் செய்யுள் திதிப்பாம் தமிழின் சொல்லில்